பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – கல்வித்துறை அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று டெல்லி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வழியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் கல்வி என்பது எந்த அளவிற்கு கற்றலை உறுதிபடுத்துகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் ஏழை, எளிய அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலால் மீண்டும் பள்ளிகளை திறக்க முடியாத நிலையும் தொடர்ந்தது.
SBI வங்கியில் கார் லோன் பெறுவது எப்படி? தகுதி, வட்டி விகிதம், விண்ணப்ப விபரங்கள்!
அதன் பிறகு தொற்று பரவல் குறைந்த பிறகு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா அதிகம் பரவுவதால் முன்னெச்சரிக்கை பணியாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.
Post Office மாதாந்திர வருவாய் திட்டம் அறிவிப்பு – மாதம் ரூ.4950 வருமானம் பெறலாம்!
இந்த நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்டோபர் 15 முதல் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று டெல்லி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நாள் விடுமுறை நாளாக கருதப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.