தமிழகத்தில் அக்.2 & 19 ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுவதால் அன்றும், அக்டோபர் 19ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக அனைத்து வகையான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் துவங்கி சரிந்து வரும் கொரோனா பரவலை தொடர்ந்து அரசு சில செயல்பாடுகளுக்கு மீண்டுமாக அனுமதி கொடுத்தது.
பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – கல்வித்துறை அறிவிப்பு!
அந்த வகையில் அரசு அனுமதித்தபடி, கடந்த 2 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மீண்டுமாக செயல்பட்டு வருகிறது. என்றாலும் டாஸ்மாக் பார்கள் மட்டும் செயல்பட அனுமதி கொடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 2 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் கார் லோன் பெறுவது எப்படி? தகுதி, வட்டி விகிதம், விண்ணப்ப விபரங்கள்!
பொதுவாக ஏதேனும் முக்கியமான அரசு விழா நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு 2 நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த 2 நாட்களும் மதுபானங்களின் விற்பனை கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.