PMAY திட்டத்தின் கீழ் இனி சொந்த வீடு கிடையாது – மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

0
PMAY திட்டத்தின் கீழ் இனி சொந்த வீடு கிடையாது - மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
PMAY திட்டத்தின் கீழ் இனி சொந்த வீடு கிடையாது - மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
PMAY திட்டத்தின் கீழ் இனி சொந்த வீடு கிடையாது – மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், மற்றொன்று, கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர், மின்சாரம்) வழங்கும் வேறு சில திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டு வசதித் திட்டத்துக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

அதிரடி உத்தரவு:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறத் திட்டம் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாகக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், கட்டிய வீட்டை தாம் பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. இதனால் உண்மையாகவே இந்தத் திட்டத்தின் கீழ் உதவி தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. இந்த புகாரை கருத்தில் கொண்டு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

இந்த புதிய விதிமுறை படி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர் முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த வீட்டில் வசிக்கிறாரா என்று கண்காணிக்கப்படுவார். மேலும் அந்த வீட்டிற்கு அவர் சொந்தக்காரராக இருந்தாலும் அது குத்தகை அடிப்படையில் தான், அவர் பெயரில் பதிவு செய்யப்படும். முதல் 5 ஆண்டுகள் கழித்த பிறகு மீண்டும் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு குத்தகை ஒப்பந்தம் முடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து பறிக்கப்படும்.

TIFAC கவுன்சிலில் டிகிரி படித்தவர்க்கு வேலை – நேர்காணல் மட்டும்..!

இதுமட்டுமல்லாமல், வீட்டுக்காக பயனாளி செலுத்திய தொகையும் திருப்பித் தரப்பட மாட்டாது. புதிய விதிமுறைப்படி, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இலவச வீடு என்பது இனி கிடையாது. குத்தகை அடிப்படையிலேயே வீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் பயனாளி இறந்து விட்டால் அவரது குடும்ப உறுப்பினருக்கு இந்த வீடு கைமாற்றப்படும். அவர்களும் இதே விதிமுறை தான் கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கும் குத்தகை அடிப்படையிலேயே வீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் PMAY திட்ட பயனாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!