ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் Insurance கிடையாது – உயர் நீதிமன்றம் அதிரடி!

0
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் Insurance கிடையாது - உயர் நீதிமன்றம் அதிரடி!
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் Insurance கிடையாது - உயர் நீதிமன்றம் அதிரடி!
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் Insurance கிடையாது – உயர் நீதிமன்றம் அதிரடி!

ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

தற்போதைய அவசர உலகில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னிருக்கையில் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாய உத்தரவாக உள்ளது. மேலும் ஹெல்மெட் அணிவதால், பலரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.

இந்நிலையில் வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு செப்.15 முதல் காலை சிற்றுண்டி – அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!