நெய்வேலி நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited) சமீபத்தில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Land Consultant (Surveyor) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
NLC India வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Land Consultant (Surveyor) பதவிக்கு என்று மொத்தமாகவே ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
சிறந்த coaching centre – Join Now
- மேலும் தமிழ்நாடு அரசு பணியில் Surveyor பதவியில் பணிபுரிந்து 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி நிரம்பியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதிகள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 62 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால்,விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் shortlist செய்யப்படுவார்கள், அதன்பின் தேர்வு குழுவின் பரிந்துரைபடி, இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
NLC India விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் / விரைவு தபால் மூலம் இறுதி நாளுக்கு (26.02.2022 ம் தேதிக்கு) முன்னதாக வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. நாளையுடன் (26.02.2022) இப்பணிக்கு இறுதி நாள் நிறைவடைவதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.