ஆகஸ்ட் 23 வரை இரவு ஊரடங்கு ரத்து – கடைகளின் இயக்க நேர கட்டுப்பாடுகள் நீக்கம்!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதால் புதிய தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ் கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் மால்கள் திறக்கும் நேரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்வுகள்
ஹரியானா மாநிலத்தில் புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதை தொடர்ந்து அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை பதினைந்து நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஆகஸ்ட் 23 வரை பகல் நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் அமலில் இருக்கும்.
செப்.15 ல் பட்டு பூங்கா திறப்பு – காஞ்சிபுரத்தில் சோதனை பணிகள் தீவிரம்!
இது தொடர்பாக ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ‘மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டம் மற்றும் துணைப்பிரிவு அளவிலான சுதந்திர தின விழாக்களுக்கு அழைக்கப்பட்டவர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த நிகழ்வுகளில் 1,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தின் போது கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் மால்கள் திறக்கும் நேரத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஹரியானாவில் இதற்கு முன்னதாக கடைகளின் இயக்க நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், உணவகங்கள் மற்றும் பார்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. தவிர கடைகள், மால்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் 50% வாடிக்கையாளர்கள் திறனுடன் செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் நேற்று (ஆகஸ்ட் 9) காலை முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இரவு நேர ஊரடங்கை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.