செப்.15 ல் பட்டு பூங்கா திறப்பு – காஞ்சிபுரத்தில் சோதனை பணிகள் தீவிரம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டு பூங்கா செப்டம்பர் 15ம் தேதி முதல் திறக்க உள்ள நிலையில் அதற்கான சோதனை முயற்சியான தறியில் சேலை நெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டு பூங்கா:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டு ஜவுளி மேம்பாட்டு துறை மற்றும் தமிழக கைத்தறி துறை பங்களிப்பு உடன் 90 கோடி மதிப்பீட்டில் ’பட்டு பூங்கா திட்டம்’ துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 12 ஆண்டுகளாக இந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. பட்டு பூங்கா திறப்பது தொடர்பாக எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த பட்டு பூங்காவை திறப்பது தொடர்பாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.
தமிழக பள்ளி, கல்லூரிகளின் பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவி உயர்வு – அமைச்சர் தகவல்!
அதன் பின்னர், அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் தேதி முதல் பட்டு பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதி அளித்தனர். அமைச்சரின் அறிவிப்பிற்கு பின்னர் இங்கு தறி கூடம் அமைக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மேற்பார்வையிட்டு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு தறி கூடம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
செப்டம்பர் 15ம் தேதி பட்டு பூங்கா திறக்கப்பட உள்ள நிலையில், சோதனை முயற்சியாக தறியில் நெசவாளர்கள் சேலை நெய்து வருகின்றனர். அங்கு மொத்தம் 24 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதில் 22 அரங்குகளிலும் தலா 96 தறி கூடங்களும், மற்ற இரண்டு தறி கூடத்தில் 24 தறி கூடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 2400 தறி கூடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் செப்டம்பரில் அரசு அறிவித்துள்ள தேதியில் பட்டு பூங்கா நிச்சயம் திறக்கப்படும் என்பது உறுதியாகிறது.