மீண்டும் இரவு ஊரடங்கு அமல், காவல்துறை தீவிர கண்காணிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி நகர காவல் துறையினர் இரவு ஊரடங்கு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் அதிக அளவிலான பாதிப்புகளை கடந்த டிசம்பர் மாத இறுதி முதல் ஏற்படுத்த தொடங்கியது. இதனுடன் கொரோனாவின் உருமாறிய வகையான ஓமைக்ரான் வகை தொற்று பரவலினால் பாதிப்புகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வந்தது. நோய் தொற்று அதிக வேகத்தில் பரவும் அபாயம் இருப்பதால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் தீவிர ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டது.
அரசு வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,02,045/- ஊதியத்தில் வேலை…!
இதனால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பின்பற்ற தொடங்கியது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் மக்கள் முறையாக கடைபிடிப்பதை காவல் துறையினர் சோதித்து வந்தனர். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில்,தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்தது.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சூப்பரான அறிவிப்பு!
தற்போது, COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் தேசிய தலைநகரில் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பிப்ரவரி 7 ம் தேதியான நேற்று இரவு டெல்லி காவல்துறையால் தடுப்பு மற்றும் சோதனை நடந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு வழிகாட்டுதல்களை வெற்றிகரமாக செயல்படுத்த டெல்லி காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கோவிட் தளர்வுகளில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) இரவு ஊரடங்கு உத்தரவின் நேரத்தை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று ஒரு மணி நேரத்தை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.