EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சூப்பரான அறிவிப்பு!
இந்தியாவில் மாத சம்பள ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
வட்டி விகிதம் உயர்வு:
2022-2023 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பயன் அடையும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இருப்பினும் மாத சம்பள ஊழியர்களுக்கு பயன் தரும் வகையில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் EPFO அமைப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் கவுகாத்தியில் நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் கூட்டத்தை நடத்த உள்ளது. மேலும் 2020-21 ஆம் நிதியாண்டில் முந்தைய ஆண்டை போல 8.5 % என்ற வட்டி விகிதத்தை EPF வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய இந்த கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த வகையில் வரும் வியாழக்கிழமை EPFO அமைப்பின் நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு மொத்த வருமானம் மற்றும் லாப அளவீடுகளைக் கணக்கிடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு EPFO வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்தினால் மாத சம்பளக்காரர்கள் கணக்கில் கடந்த நிதியாண்டு வரையில் வைப்பு வைக்கப்படும் நிதிக்கு கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.