பிப்.11 முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (பிப்.11) முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு:
திரிபுரா மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு சற்றே உயர்ந்து வருவதால், தற்போதுள்ள நிலைமையை கண்காணித்த அரசு நாளை (பிப்.11) முதல் பிப்ரவரி 20 தேதி வரையும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் நாளை (பிப்.11) இரவு 10 மணி முதல் தினந்தோறும் காலை 5 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர திரிபுரா மாநில அரசு சில கூடுதல் செயல்பாடுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது திரிபுரா அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, சினிமா திரையரங்குகள், ஜிம்கள், ஸ்பாக்கள், ஆகியவை 50% திறனுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் 50% திறன் கொண்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் பிப்.16ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதே நேரத்தில் ரெஸ்டாரண்டுகள் அனைத்தும் இரவு 10 மணி வரை 50% இருக்கை வசதியுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலக ஊழியர்கள் 100% திறனுடன் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவது உள்ளிட்ட முறையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.