தமிழகத்தில் பிப்.16ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதியன்று ஷேக் பீர் முகமது சாகிப் வலியுல்லா அவர்களின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 3ம் அலைத்தொற்றின் வேகம் குறைந்து வரக்கூடிய சூழலில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து விதமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் செயல்பட துவங்கி இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் பிப்ரவரி 16ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா – இன்றைய எபிசோட்!
அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தக்கலை ஷேக் பீர் முகமது சாகிப் வலியுல்லா அவர்களின் ஆண்டு விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 16ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழகம் 2வது இடம்!
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வருகின்ற 16.02.2022 அன்று தக்கலை ஷேக் பீர் முகமது சாகிப் வலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, பிப்ரவரி மாதத்தில் நான்காவது சனிக்கிழமையன்று அதாவது 26.02.2022 தேதி வேலை நாளாக இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.