மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!

0
மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!
மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!
மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!

கர்நாடகா மாநிலத்தில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பி.எஸ்.பொம்மை தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொரோனா ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கர்நாடகா மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அந்த கூட்டத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நிபுணர்களை மேற்கோள் காட்டிய அவர் கர்நாடகாவில் வரும் நாட்களில் கொரோனா வழக்குகள் குறையக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் – உத்தரவு பிறப்பிப்பு!

இதற்கிடையில் கர்நாடக அரசு இந்த மாத தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தியது. இது தொடர்பான வழிகாட்டுதல்களின்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பெங்களூரு மாநகரத்தில் புதிய கொரோனா வழக்குகள் குறைந்து வருவதைக் காணும் அதே வேளையில், கர்நாடகாவின் பிற மாவட்டங்களுக்கும் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் – மத்திய அரசு வெளியீடு!

ஏனெனில் முழு ஊரடங்கு அச்சம் காரணமாக மாநில தலைநகரில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் 20 முதல் 30 மடங்கு அதிகமான தொற்று விகிதம் பதிவாகியுள்ளது. குறிப்பாக தென் கர்நாடகாவின் நான்கு மாவட்டங்களில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதே போல வடக்கு கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் தினசரி 10 மடங்கு அதிகமாக கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில் நிபுணர்களின் கூற்றுப்படி, கர்நாடகாவில் கொரோனா தொற்றுநோய் ஜனவரி 24க்குள் அதன் உச்சத்தை எட்டும் என்றும் பின்னர் வழக்குகள் குறையத்துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!