இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் – மத்திய அரசு வெளியீடு!

0
இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் - மத்திய அரசு வெளியீடு!
இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் - மத்திய அரசு வெளியீடு!
இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் – மத்திய அரசு வெளியீடு!

இந்தியாவில் உருமாறிய ஓமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து மீண்டும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய சிகிச்சை வழிகாட்டுதல்கள்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை பரவியதை தொடர்ந்து கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் உருவான உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பரவுவதை தொடர்ந்து மீண்டும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஓமைக்ரான் கொரோனாவிற்கு கொரோனா 2வது அலையில் பயன்படுத்திய மருந்துகளை தவிர்த்து புதிய மருந்துகளை வழங்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி மட்டுமே காணப்படுவதாகவும், அவர்களுக்கு பாதிப்பும் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்தே தனிமைபடுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

அதேபோல் பிற நோய் தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே கடுமையான பாதிப்பு நிலவுவதால் அவர்களுக்கு மட்டும் ICU வில் வைத்து தீவிர சிகிச்சை வழங்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டெராய்டுகள் வழங்குவதை தவிர்க்குமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில் ஸ்டெராய்டுகள் பயன்படுத்துவதால் இன்வெசிவ் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே மத்திய அரசு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. அதில் 60 வயதிற்கு மேற்பட்ட பிற நோய் தொற்று உள்ள அனைவரும் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!