தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் – உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் – உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை முடிந்து ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆலோசிக்கப்பட்டு 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து ஆசிரியர் உதவியுடனும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் அரசின் யூடியூப் சேனல் மூலமாகவும் படிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜன.2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்தது

மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில் அதிகரித்த தொற்று பரவலால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதால் அன்று வரை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 14ம் தேதி தமிழக்த்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 முதல் 16 வரை 3 நாட்களுக்கு பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக திங்கட்கிழமை (ஜன.17) அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று (ஜன.18) இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜன.25 வரை முழு ஊரடங்கு அமல்? பிரதமர் விளக்கம்!

இவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் விடுமுறை முடிவடைகிறது. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் விடுமுறை முடிந்து ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளியில் மாணவர்கள் மீண்டும் வரும் வரை ஆசிரியர்கள் அலுவலக பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!