மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
ஒடிசா மாநில அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு 3% உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதனால் மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இறுதியாக அகவிலைப்படி 2021 ஜூலை 1 தவணைக்கு 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த தவணைக்கான DA உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.அதன்பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் செப்டம்பர் 2021 வரை 2% DA உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகான 2 மாதங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களின் டிஏ உயர்த்தப்பட்டால், பணவீக்க புள்ளிவிவரங்களைப் பொறுத்து, ஜனவரி 1, 2022 முதல் அவர்களுக்கு 34 சதவீத டிஏ கிடைக்கும்.
நாடு முழுவதும் ஜன.25 வரை முழு ஊரடங்கு அமல்? பிரதமர் விளக்கம்!
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எப்போதும் மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க தொடங்கிவிடும். அந்த வகையில் தற்போது ஒடிசா மாநில அரசு 2022 ஜனவரிக்கு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக முதல்வர் வீன் பட்நாயக் அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களும் இதே போன்று 3 சதவீதம் டிஏவை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் – மத்திய அரசு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களை போல் ஒடிசா மாநிலஅரசு ஊழியர்களும் இப்போது 31 சதவீத டிஏவை பெருகிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த முடிவினால் 7.5 லட்சம் ஒடிசா மாநில அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வுடன், ஊழியர்களுக்கு 30 சதவீத 7வது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2016 மற்றும் 2017ம் ஆண்டு சம்பளத்தில் மீதமுள்ள 50 சதவீதத்தை ஊழியர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 6 லட்சம் ஒடிசா மாநில அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.