கணவர் முன் மாஸ் காட்டும் பாக்கியா, அதிர்ச்சியில் உறைந்த கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தான் வாங்கிய சமையல் ஆர்டர் கோபி ராதிகா திருமணத்தில் தான் என்ற உண்மையை தெரிந்து கொண்ட பாக்கியா நேராக கோபியை சந்தித்து இது பற்றி பேச போகிறார். இந்நிலையில் பாக்கியா சொன்னதை கேட்டு கோபி அதிர்ச்சியில் உறைய போகும் எபிசோடுகள் இனி வரும் வாரத்தில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கும் அதிரடி திருப்பங்கள் எல்லாம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வரும் நிலையில், தற்போது சீரியலில் கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. சந்துரு தன்னுடைய தங்கை ராதிகாவின் திருமணத்தை கோலாகலமாக நடத்த நினைக்க, காலம் போன காலத்தில் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். மறுபக்கம் பாக்கியா இதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய தொழிலில் மாஸ் காட்டி வருகிறார்.
அவருக்கு பெரிய சமையல் ஆர்டர் ஒன்று கிடைக்க அதை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாக்கியா இருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவிற்கு தனக்கு கிடைத்த சமையல் ஆர்டர் கோபி ராதிகா திருமணத்தில் தான் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் பாக்கியா கோபியை சந்தித்து இது பற்றி பேச நினைக்கிறார். கோபியை நேருக்கு நேர் சந்தித்து திருமணம் பற்றி கேட்கிறார். உடனே கோபி ஆமாம் திருமணம் செய்ய போகிறேன் நீ என்ன செய்தாலும் தடுக்க முடியாது என சொல்கிறார்.
அடுத்தடுத்து முடிவுக்கு வரும் பிரபல நடிகரின் சீரியல்கள் – ஷாக்கான ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
உடனே பாக்கியா நானும் அதை தான் சொல்ல வந்தேன், என்ன நடந்தாலும் திருமணத்தை நிறுத்திவிடாதீர்கள். ஏன் என்றால் உங்களுடைய திருமணத்தில் நான் தான் சமைக்க போகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆர்டர். அதை நான் சரியாக செய்து முடிக்க வேண்டும் என சொல்கிறார். பாக்கியா பேசியதை கேட்டு கோபிக்கு பயங்கர கோவம் வருகிறது. இவளுக்கு எவ்வளவு திமிரு என கோபி நினைக்கிறார். இதெல்லாம் இனி வரும் வார எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்