ராதிகாவை திருமணம் செய்த கோபி, அதிர்ச்சியில் பாக்கியா & எழில் – சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை விட்டு பிரிய முடிவு செய்த பாக்கியா கோர்ட்டில் விவாகரத்து கேட்கிறார். கோர்ட் விவாகரத்து கொடுத்துவிட, இது தான் சரியான நேரம் என கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இதுவரை ஏமாற்றியது எல்லாம் தெரிந்து பாக்கியா வருத்தப்பட குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் சுயநலமாக முடிவு ஒன்றை எடுக்கிறார். வாழ்க்கையை வாழ தன்மானம் தான் முக்கியம் என்பதால் கோபியை விட்டு விலக முடிவு செய்கிறார். அதனால் கோர்ட்டிற்கு சென்று கோபியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்ல, கோர்ட் விவாகரத்து வழங்குகிறது.
ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம்!
இந்நிலையில் கோபி விவாகரத்து கொடுத்ததை நினைத்து கோவப்பட, பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். எழில் பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்தாலும் பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் அடுத்து எடுக்க இருக்கும் முடிவு என்னவாக இருக்கும் என தெரியாமல் இருக்கிறது. மேலும் ஈஸ்வரி ராதிகாவுக்கு பல சாபங்கள் கொடுத்ததால் கோபியை திருமணம் செய்வது குறித்து ராதிகாவின் மனம் மாறுகிறது.
இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டிற்கு கோபி சென்று விவாகரத்து கிடைத்துவிட்டதாக சொல்கிறார். நீங்கள் தடுக்கவில்லையா என ராதிகா, கேட்க பாக்கியா தான் விவாகரத்து வேண்டும் என சொன்னதாக கோபி சொல்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா மனம் மாறி கோபியை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அவர்களுடைய திருமணம் முடிந்துவிட அந்த செய்தியை கேட்டு பாக்கியாவும் எழிலும் அதிர்ச்சி அடைகின்றனர்.