இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய தடை ஒன்றை விதித்துள்ளது. இது குறித்து ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தடை:

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதியால் மக்கள் எளிதாக இருந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதனால் நேரமும் வேலையும் மிச்சமாகிறது. அதே நேரத்தில் இதனால் பல்வேறு விளைவுகளும் ஏற்படுகிறது. குறிப்பாக நாம் எந்த நேரமும் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களினால் நமக்கு பல்வேறு ஆபத்துகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது இந்த தொழில்நுட்பம் வாயிலாக மற்றவர்களின் செல் போன்களை ஹேக் செய்ய முடியும். இதன் மூலம் மறைமுகமாக பலரது ரகசிய தகவல்களை அறிய முடியும். ஆனால் இது சட்ட ரீதியாக விரோதமான செயலாகும்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்னும் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க அதனால் மத்திய அரசு சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் தகவல் தொடர்பை செயலிழக்கச் செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்ய முடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்ட விரோதமானது.

Exams Daily Mobile App Download

அதனால் அரசின் அனுமதி இல்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் சிக்னல் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது. மேலும் சமிக்ஞை பூஸ்டர்களைப் பொறுத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர பிற நிறுவனங்களோ அல்லது தனிநபர்களே செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது. இந்த கம்பியில்லா ஜாமர்களை யாரும் இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!