அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்னும் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
தற்போது துவங்கி இருக்கும் ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் இன்னும் 8 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களை கணக்கிட்டு பொது மக்கள் தங்களது வங்கி தேவைகளை புரிந்து செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விடுமுறை அறிவிப்பு
பொதுவாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியலை RBI இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலையும் காண்கையில் ஜூலை மாதத்தில் இன்னும் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஜூலை மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளைத் தவிர 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
சென்னை: மீண்டும் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இருப்பினும், ஆன்லைன் அல்லது நெட் பேங்கிங் இந்த நாட்களிலும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தேசிய நிகழ்வுகள் அல்லது பொது விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, ஜூலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட வங்கி தொடர்பான பணிகள் ஏதேனும் இருந்தால், ஜூலை மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலை அறிந்து கொண்டு அதற்கேற்ப சேவைகளை விரைந்து மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- ஜூலை 1 – ரதஜாத்ரா, ரத யாத்திரை காரணமாக புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 7 – கர்ச்சி பூஜை காரணமாக அகர்தலாவில் மட்டும் வங்கிச் செயல்பாடுகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 9 – பக்ரித் காரணமாக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Exams Daily Mobile App Download
- ஜூலை 11 – ஈத்-உல்-அஷா பண்டிகையையொட்டி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 13 – பானு ஜெயந்தியை முன்னிட்டு காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 14 – ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் பெஹ் டீன்க்லாமை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 16 – ஹரேலாவை முன்னிட்டு டேராடூனில் வங்கிச் செயல்பாடுகள் நிறுத்தப்படும்.
- ஜூலை 26 – கேர் பூஜை காரணமாக அகர்தலாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த தேதிகளைத் தவிர, ஜூலை 9 மற்றும் ஜூலை 23, ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஜூலை 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.