WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – செய்திகளை குறிப்பிட்ட காலத்தில் மறைய வைக்கும் புதிய அப்டேட்!
மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுகர் பெர்க் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் பற்றிய பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அப்டேட் குறித்த விளக்கத்தினை இந்த பதிவில் காண்போம்.
புதிய அப்டேட்:
மெட்டா தளத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் புதிய புதுப்பித்தல் மூலம் தனது பயனர்களுக்கு புதிய வசதியினை அறிமுகம் செய்வது குறித்து மார்க் ஜுகர் பெர்க் அறிவித்துள்ளார். ஒரு செய்தியை எத்தனை நாட்கள் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு பல கூடுதல் விருப்பங்களை பயனர்களுக்கு வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த அம்சம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பயனர்களுக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகள் மறைந்துவிடும் விருப்பம் இருந்தது.
அப்போது, புதிய புதுப்பித்தலில் 24 மணிநேரம் அல்லது 90 நாட்களுக்கு பிறகு செய்திகளை நீக்குவது குறித்து விருப்பங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டது. இதற்கான செயல்பாடு ஆய்வு பணிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மெசேஜ்கள் தானாக மறைவதற்கான இயல்புநிலை ( DEFAULT ) விருப்பத்தினை நாம் ஆன் செய்வதன் மூலம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஏற்கனவே உள்ள மெசேஜ்கள் பாதிக்காது என்று வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. நாம் புதிதாக ஒரு நபருடன் மெசேஜ்களை பரிமாறிக் கொள்ள தொடங்கும் போது, தானாக செய்திகள் மறையும் அம்சம் இயக்கத்தில் இருப்பது குறித்த அறிவிப்பு உங்களுக்கு தோன்றும்.
மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் – காணொளி மூலம் முதல்வர் திறப்பு!
இதனை நாம் இயக்கத்தில் இல்லாமல் ( OFF) வைக்கவும் விருப்பங்கள் உள்ளது. இந்த புதிய அம்சங்கள் அமைப்பு குழு அரட்டைகளைப் பாதிக்காது. இருப்பினும், மறைந்து வரும் செய்திகளை இயக்க உங்களை அனுமதிக்க குழுக்களை உருவாக்கும் போது புதிய விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மேலும், புதிய அம்சங்கள் இப்போது அனைத்து தளங்களிலும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை WhatsApp இன் FAQ பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.