போட்டி நடக்கும் போது சமையலை கெடுத்த அர்ச்சனா, சிக்கலை சந்திக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சமையல் போட்டியில் நடுவராக மோகன் வைத்தியா வருகிறார். பின் அர்ச்சனாவின் சதியால் சரவணன் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சமையல் போட்டியில் ஏற்கனவே இரண்டு நடுவர்கள் இருந்த நிலையில் மூன்றாவதாக மோகன் வைத்தியா கலந்து கொள்கிறார். அப்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என சொல்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் சமையல் எனக்கு நன்றாக வரும் என தெரியும் என சொல்கிறார். பின் இந்த போட்டியில் இது தான் சமைக்க வேண்டும் என கட்டாயம் இல்லை, விருப்பமான எல்லாத்தையும் சமைக்கலாம் என சொல்கின்றனர்.
மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் – காணொளி மூலம் முதல்வர் திறப்பு!
அப்போது அண்ணன் ஜிலேபி தான் நன்றாக சமைப்பார் என பார்வதி சொல்ல, அதில் என்ன புதுமை என ஆதி சொல்ல, நமக்கு நன்றாக தெரிந்ததையும் பிடித்ததையும் தான் செய்ய வேண்டும் என சந்தியா சொல்கிறார். அப்போது சரவணன் ஜிலேபி செய்கிறேன் என முடிவு செய்கிறார். பின் சிவகாமி சரவணன் போட்டியில் கலந்து கொள்வதை பார்த்து ரசிக்கிறார். மேலும் சர்க்கரையும் சரவணனை டிவியில் பார்த்து சந்தோசப்படுகிறார்.
சரவணன் சமையல் செய்ய புதிதாக கரண்ட் அடுப்பு கொடுக்கின்றனர். சிவகாமி இது என்ன புதிதாக இருக்கிறது என மயிலிடம் கேட்க, இது கரண்ட் அடுப்பு அம்மா என மயில் சொல்கிறார். இதை வைத்து என் புள்ள எப்படி சமைப்பான் என சிவகாமி கேட்க, அதெல்லாம் ஐயா நன்றாக சமைத்திருவார் என மயில் சொல்கிறார். பின் சரவணன் சமையல் வேலையை தொடங்க, அர்ச்சனா திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதன் படி சரவணன் அடுப்பு இருக்கும் வயரை துண்டித்து விடுகிறார்.
விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம் – விரைவில் ‘ஈரமான ரோஜாவே’ 2ம் பாகம் ஒளிபரப்பு!
சரவணன் நன்றாக சமைக்க வேண்டும் என சொல்ல, எல்லாம் நல்லபடியாக முடிந்தது என சல்மாவிடம் கை காட்டுகிறார். அடுப்பு அமைந்தது தெரியாமல் சரவணன் சரியாக சமைக்க முடியவில்லை. அப்போது சரவணனை டிவியில் பார்த்து சிவகாமி எதோ தவறு நடப்பது போல நினைக்கிறார். பின் சரவணன் சரியாக சமைக்காமல் இருக்க, நடுவர் சரி இல்லை என சொல்கிறார். அப்போது அர்ச்சனா சல்மாவின் திட்டத்தை பற்றி நினைக்கிறார். சல்மா சொன்ன திட்டம்படி நடந்து கொண்டதை நினைத்து சந்தோசப்படுகிறார். சிவகாமி என் பையன் ஒருநாளும் தவறாக சமைக்கமாட்டான் என நினைக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.