காபி கூட கிடைக்காமல் கஷ்டப்படும் கோபி.. பாக்கியாவின் அருமையை உணரும் தருணம் – “பாக்கியலட்சுமி” அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை பிரிந்து கோபி தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நிலையில், முதல் நாளே காபி கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். அதனால் அவருக்கு பாக்கியாவின் அருமை புரிய வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பரிதாபமான நிலை தான் தற்போது பெரிதாக காட்டப்பட்டு வருகிறது. அம்மா, அப்பா, மனைவி, மகள், மகன்கள் என அனைவரையும் எதிர்த்து கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் பல பிரச்சனைகள் வந்தது, கோபி குடும்பத்தினர் ராதிகாவை அசிங்கப்படுத்த, ஆனால் கோபி ராதிகாவிற்கு ஆதரவாக தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து நின்றார். அதன் பின் கோபி ராதிகா ஹனிமூன் செல்ல, அங்கேயும் பாக்கியா குடும்பத்துடன் எதார்த்தமாக வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் ராதிகா கோபி மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா சரியாக பேசவில்லை. இன்றைய எபிசோடில் கோபி குளித்துவிட்டு வர ஆனால் ராதிகா ஒரு துண்டு கூட எடுத்து கொடுக்கவில்லை. கோபி பல முறை ராதிகாவை அழைத்து பார்த்துவிட்டு கடைசியில் துண்டு இல்லாமல் வேஷ்டியில் தலையை துவட்டிக் கொள்கிறார். பின் கீழே வர கோபிக்கு ஒரு காபி கொடுக்க கூட ஆள் இல்லை. ஒரு வழியாக ராதிகாவின் அம்மா காபி போட செல்ல, ஆனால் அவர் டீ போட்டு தருகிறார்.
இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
கோபிக்கு டீ பிடிக்காது என்ற விசயம் கூட ராதிகாவுக்கு தெரியவில்லை. கோபி வேறு வழியில்லாமல் அதை குடிக்க ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது அவருக்கு பாக்கியாவின் நினைப்பு வருகிறது. பாக்கியா அருமையாக காபி போட்டு கொடுப்பாள் என்ற நினைவு வருகிறது. இப்படியே இனி வரும் எபிசோடுகளில் கோபிக்கு பாக்கியா எவ்வளவு நல்ல மனைவியாக இருந்தார் என்பது புரிய வர இருக்கிறது. அதனால் அவர் பாக்கியா காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ள சொல்லி கெஞ்சும் நாட்கள் கூடிய விரைவில் வர இருக்கிறது.