விஜே சித்ரா மரணத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் – தாயின் குமுறல்! ரசிகர்கள் அதிர்ச்சி!
சின்னத்திரை தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான சித்ரா மரணத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சித்ராவின் அம்மா தனது மனக்குமுறலை செய்தி ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜே சித்ரா:
சின்னத்திரையில் அசைக்க முடியாத அளவிற்கு தனி இடத்தை பிடித்தவர் விஜே சித்ரா. இவர் இறந்த பின்னரும் இவரது திறமை அங்கீகரிக்கப்படுவது தான் இவரது கடின உழைப்பிற்கான சாட்சியாக உள்ளது. எத்தனையோ நடிகர், நடிகைகள் இருக்கும் போதிலும், சித்ராவின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. சின்னத்திரை ரசிகர்கள் அனைவரின் மனதிலும், நினைவிலும் நீக்க முடியாத அளவிற்கு புகழை அடைந்த சித்ரா கடந்த 2020 டிசம்பர் மாதம் 9ம் தேதி மரணத்தை அடைந்தார்.
Exams Daily Mobile App Download
தனது வயதின் 20ன் கடைசிகளில் இருந்தவருக்கு அதுவே வாழ்வின் கடைசி நாட்கள் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. சித்ராவின் மரணம் தற்கொலை என்று ஒரு தரப்பும், இல்லை அவரது கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்து விட்டார் என்று ஒரு தரப்பும் கூறி வந்தனர். இந்த வழக்கில் சிறை சென்ற ஹேம்நாத், பெயில் கிடைத்து வெளியில் வந்து விட்டார். தற்போது அவராகவே சித்ராவின் மரணத்திற்கும், ஒரு அரசியல் பின்புலம் உள்ள ஒருவருக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
சில காலம் சித்ராவின் மரணத்தை பற்றி பேச்சுக்கள் அனைத்தும் ஓரம் போயிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனைவரும் விவாதிக்கும் விஷயமாகி விட்டது. இந்நிலையில் அவரை பற்றிய தவறான கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனால் மனம் உடைந்து போன சித்ராவின் அம்மா, சித்ரா இவர்கள் சொல்வது போல் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதவர், ஒருவர் இறந்து போன பிறகு எதற்கு அவரை பற்றிய தவறான கருத்துக்களை பரப்புகிறீர்கள். மேலும், சித்ராவை ஹேம்நாத் தான் கொலை செய்துள்ளார் என்றும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.