தமிழக பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாட திட்டம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் பாடத்திற்கான புதிய பாடத் திட்டத்தை வகுத்துள்ளது. மேலும் பாட திட்டங்கள் வெளியாகும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தது. இதன் காரணமாக சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் கொரோனா பரவல் நேரத்தில் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதே போல் கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp மூலமான பரிவர்த்தனை செய்யும் முறைகள்!
தற்போது கொரோனா பரவல் குறைந்து நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தினை வகுத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கல்வி மானிய குழுவில் அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்த பாட திட்டங்கள் வருகிற 18ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் புதிய பாடத்திட்டத்தில் தற்போதைய சூழலுக்கேற்ப பாடப்பகுதி இடம்பெறுகிறது. அதாவது மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறும் விதத்திலும், தனித்திறமையை ஊக்குவிக்கும் விதத்திலும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.