‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2 கண்ணம்மாவையும் சேர்த்து புதிய சீரியல் – ரசிகர்கள் ஆர்வம்!
விஜய் டிவியில் அடுத்தடுத்து பல புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில், ரசிகர்களின் விருப்பமான பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள் நடிக்கும் புதிய சீரியல் தொடங்க உள்ளது.
புதிய சீரியல்:
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து தொடர்களிலும் இருந்து மாறுபட்ட புதிய கதைக்களம் தான் சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. பொதுவாக சீரியல் என்றாலே கொடுமைக்கார மாமியார் தான் ஹை லைட்டாக இருப்பார். ஆனால் பாரதி கண்ணம்மா தொடரில் அநியாயம் செய்யும் தன் மகனை திருத்துவதற்கு மருமகளுக்கு உதவியாக இருப்பதே மாமியார் தான். கண்ணம்மாவும் சந்தேகப்படும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று இல்லாமல் தைரியமாக ஒரு முடிவை எடுத்து வீட்டில் இருந்து வெளியேறி விடுவார்.
தனது சொந்த காலில் நின்று உழைத்து தனது வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறார். கிட்டத்தட்ட 8 வருடங்கள் யாரையும் பார்க்காமல் சுயமாக உழைத்து வாழும் கண்ணம்மா தனது குழந்தைகளுக்காக கணவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். ஆனால் பாரதி, கண்ணம்மா மீது கொண்ட கோவத்தின் காரணமாக விவாகரத்து பெற நினைக்கிறார். இப்படி கதை செல்லும் நிலையில், கதையில் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் விலகி தற்போது புதிதாக ஒருவர் கண்ணம்மாவாக நடிக்கிறார்.
புது நிகழ்ச்சிக்கு தயாரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – இன்ஸ்டா பதிவு!
இந்த இரண்டு கண்ணம்மாவையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஒரு சீரியல் துவங்குவதற்கான ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது முழுக்க ஒரு எடிட் வீடியோவாக இருந்தாலும், இப்படி ஒரு புதிய சீரியல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பலரையும் நினைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த புதிய சீரியல் விரைவில் தொடங்க வேண்டும் என்று கமெண்டு செய்து வருகின்றனர். இதனால் சீரியல் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.