விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா – ‘செம்பருத்தி’ ஷபானா என்ட்ரி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவிற்கு பதிலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும் கதாநாயகி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் ஆல்யா மானசா ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர்.
ஆல்யா மானசா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப கதைக்களத்துடன் ஒரு மனைவி தனது கணவரின் வெற்றிக்கு எவ்வாறெல்லாம் உறுதுணையாக உள்ளார். என்று அனைவரும் விரும்பி பார்க்க கூடிய வகையில் காட்சிகள் இடம் பெற்று வருகிறது. மேலும் ஆல்யா மற்றும் சரவணனின் காதல் காட்சிகள் ரசிக்க கூடிய வகையில் உள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதற்கு முன்னர் ராஜா ராணி சீரியல் சீசன் 1ல் சஞ்ஜீவ்விற்கு ஜோடியாக வேலைக்கார பெண்ணாக செம்பா கேரக்டரில் நடிகர் அலியா நடித்தார்.
புது நிகழ்ச்சிக்கு தயாரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – இன்ஸ்டா பதிவு!
இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து ராஜா ராணி 2 ஒளிபரப்பப்பட்டது. இதில் ஆல்யா மானசா இவர் 17 வயதில் மாடலிங் துறையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த ராஜா ராணி சீரியல் 1ல் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்க்கும் இவருக்கும் சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே காதல் ஏற்பட்டது. பெற்றோர்கள் இவர்களது காதலை ஒத்து கொள்ளாததால் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆல்யா மானசா கர்ப்பமானார்.
ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் – ரோஜா சீரியல் டிவிஸ்ட்!
ஆல்யா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு குழந்தையின் பெயர் சையத்.தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதாக அவரின் அவரின் கணவர் சஞ்சீவ் அண்மையில் சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இவர் தற்போது சீரியல் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்துள்ளது. இவருக்கு பதிலாக ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இணைத்து உள்ள புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த அசிங்கமான சீரியல் இனியும் தொடர வேண்டுமா