மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திடீர் உத்தரவு பிறப்பிப்பு!
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிற அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி உத்தரவு:
கொரோனா காலகட்டத்தில், மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு நடைமுறை உடனடியாக ரத்து செய்தது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இருப்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வருகை பதிவுக்கான பயோமெட்ரிக்கில் விரலை ஒவ்வொருவரும் வைத்துக் கொண்டே இருந்தால் அதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்தது, மேலும் கொரோனா பரவல் தொடங்கியவுடன் பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக்கில் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – 23% வரை சம்பளம் உயர்வு!
அந்த வகையில் மாநிலங்களவையில் பணிபுரியும் 1,300 ஊழியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையாக கடந்த ஆகஸ்ட் 2018 இல் மாற்றப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக மார்ச் 2020 இல் பயோமெட்ரிக் முறை ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மீண்டும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்த உள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில், “கொரோனா நோய் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளிட்டவை ஆராய சோதனை முறையில் மே 31 வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்படவுள்ளன” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.