இந்தியாவில் வாரத்தில் 4 நாட்கள் வேலையுடன் கூடிய தொழிலாளர் குறியீடு | புதிய நிதியாண்டில் அமல்?
வரும் 2022-23ம் நிதியாண்டில் புதிய தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், ஐந்து நாள் வேலை வாரத்திற்கு மாற்றாக நான்கு நாள் வேலை வாரம் உள்ளிட்ட சில நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் குறியீடுகள்
மத்திய அரசு வரும் 2022 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நிதியாண்டில் ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகியவற்றில் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய குறியீடுகளின் கீழ், ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணி கலாச்சாரம், வேலை நேரம் மற்றும் வார நாட்களின் எண்ணிக்கை தொடர்பான பல அம்சங்கள் மாறக்கூடும். அதே வேளையில் ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும் குறைவாக இருக்கும்.
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை!
இந்த புதிய தொழிலாளர் குறியீடுகள் வரும் 2022-23ம் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள ஊழியர்கள் அடுத்த ஆண்டு முதல் நான்கு நாள் வேலை வாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது, ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு 12 மணிநேரம் என்ற முறையில் வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு வாரத்தில் சுமார் 48 மணி நேர வேலை நேரத்தை ஊழியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில் நிறுவனங்கள் அதிக வருங்கால வைப்பு நிதிப் பொறுப்பைச் சுமக்க வேண்டும் என்பதும் தொழிலாளர் குறியீடுகளின் கூடுதல் முக்கியத்துவம் ஆகும். அதாவது மத்திய அரசின் புதிய சட்டங்கள், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) ஆகியவற்றை கணக்கிடும் விதத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும். இந்த புதிய குறியீடுகளின் கீழ், ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். ஆனால் மாதாந்திர சம்பளம் குறைக்கப்படும். மேலும் இந்த விதிமுறைகள் அலவன்ஸ்களை 50 சதவீதமாக கட்டுப்படுத்துகிறது.
அதாவது ஒருவரது சம்பளத்தில் பாதி அடிப்படை ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு, அகவிலைப்படியை (DA) உள்ளடக்கிய ஊதியத்தின் சதவீதமாகவும் கணக்கிடப்படுகிறது. இதற்கிடையில் தற்போதைய தொழிலாளர் விதிமுறைகளின்படி, PF இருப்புக்கான, முதலாளியின் அடிப்படையிலான பங்களிப்பு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பொறுத்து அமைக்கப்படுகிறது. ஒரு பணியாளரின் சம்பளம் மாதம் ரூ.50,000 எனில், அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆகவும், மீதமுள்ள ரூ.25,000 அலவன்ஸ்களாகவும் இருக்கலாம்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், கல்வித் தகுதி, தேர்வு முறை – முழு விவரங்கள் இதோ!
இருப்பினும், இந்த அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டால், அதிக PF கழிக்கப்படும். இதனால் உள் சம்பளம் குறையும் மற்றும் முதலாளி அல்லது நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்கும். இதுவரை மத்திய அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளின் விதிகளை இறுதி செய்துள்ளது. இப்போது மாநிலங்கள் தங்கள் பங்கில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதன் படி தொழிலாளர் குறியீடுகள் இறுதி செய்யப்பட்டு, அடுத்த நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 13 மாநிலங்கள் இந்தச் சட்டங்களுக்கான வரைவு விதிகளை முன்பே வெளியிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.