தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள், முகக்கவசம் அணிவது கட்டாயம் – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் முகக்கவசம் கட்டாயம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மூன்று அலைகளை தாண்டி கொரோனா பரவல் தமிழகத்தில் குறையத் துவங்கியது.
ExamsDaily Mobile App Download
இதுவரை தமிழகத்தில் 91.5 சதவீதத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும், இரண்டாம் தவணையை 74.75 சதவீதத்தவர்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரமாக தெருக்களில் நடமாட துவங்கினர். இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தலைநகரான டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கண்டிப்பாக பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணியும்படியும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் மட்டுமே மூன்றாம் அலையில் அவ்வளவாக தாக்கம் இல்லை. தற்போது நான்காம் அலையையும் மக்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.