தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 2020-யை மத்திய அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கைக்கான எழுதப்பட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பாடத்திட்டத்தில் 3 வது மொழி
தேசிய கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை 1886 க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது. கல்விக் கொள்கை திட்டம் 2022ம் ஆண்டிற்கான மழலையர் கல்வி முதல் இடைநிலை பள்ளி கல்வி மற்றும் பள்ளி கல்வி துறையில் 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?
இதையடுத்து,மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய கல்விக்கொள்கை இன்னும் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை மற்றும் சில மாநிலங்களில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாடத்திட்டத்தில் மும்மொழி சேர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பாடத்திட்டத்தில் 3 வது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்பதும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
ExamsDaily Mobile App Download
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை மட்டும் தான் அமலில் இருக்கிறது என்றும் இதை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கவில்லை என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே தற்போது வழக்கத்தில் இருக்கிறது தான் உண்மை என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.