இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? நாளை மறுநாள் (ஏப்.27) பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தலைதூக்கி உள்ளதால், டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முகக் கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 27 ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஊரடங்கு அமல்
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரசை ஒழிக்க அனைத்து நாட்டு சுகாதார துறையும் இதுவரை போராடி வருகிறது. ஒரு சில நாடுகளில் கொரோனா வைரசுடன் இணைந்து வாழ பழகி கொண்டு உள்ளனர். உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கடந்த ஜனவரி மாத இறுதியில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதை கருத்தில் கொண்டு பிப்ரவரி மாதம் முதல் ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்தன. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!
இந்நிலையில் கொரோனவின் பிறப்பிடமான சீனாவில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
ExamsDaily Mobile App Download
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 2,527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதே கொரோனா பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து வரும் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.