சத்தீஷ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது அத்துடன் ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணியை பிப்.29 க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அத்துடன் 5 வருடங்களுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் புதுப்பித்தல் பணியை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனரகத்தின் இயக்குனர், சுமார் 76 லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பவுள்ளதாக தெரிவித்தார். இப்பணியை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா, முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிக்கான ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு புதுப்பிப்பு இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.