தமிழக ரேஷன் கடைகளில் சரியான முறையில் பொருட்கள் வழங்கவும், முறைகேடுகளை தடுக்கவும் அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அரசு நடவடிக்கை
தமிழக ரேஷன் கடைகளில் தற்போது பயோமெட்ரிக் முறை மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்ந பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இந்தியன் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலை – ரூ.15,000/- ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
இதற்காக ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அரசு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய PoS ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.