தமிழகத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை – முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவு குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வது குறித்து புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
போலி பத்திரப்பதிவு சட்டம்:
தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவுச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். மேலும் அது போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்நிலையில் இந்த சட்டம் குறித்து பல துறைகளின் ஆய்விற்கு பின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
அதன் படி இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்து ரத்து செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப் 28) சென்னை தலைமை செயலகத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள முக்கிய இயக்கம்? – காவல் துறையினர் உஷார் நிலை!
Exams Daily Mobile App Download
மேலும் போலி பத்திரப்பதிவு பற்றி பதிவுத்துறை அலுவலகத்துக்கு வந்த சுமார் 12,000 புகார் மனுக்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.போலி பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம் என புதிய சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்