தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள முக்கிய இயக்கம்? – காவல் துறையினர் உஷார் நிலை!
தமிழகத்தில் சமீபத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவங்களின் காரணமாக இஸ்லாமிய இயக்கங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையின் அடுத்தகட்டமாக முக்கிய இயக்கம் ஒன்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதற்றத்தில் தமிழகம்:
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த வாரம் நடந்து வந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மிகவும் பதற்றத்தை அளித்தது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இஸ்லாமிய இயக்கங்கள் , ஜமாத்தார்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினரிடம் அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும், கைது மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தது. குறிப்பாக, கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளது.
தமிழகத்தில் செப். 30-ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!
Exams Daily Mobile App Download
இதனால், தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்க்கு மத்திய அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது. இதனால் மேலும், போராட்டம் நடத்த உள்ளதாக உளவு துறை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்