தமிழகத்தில் செப். 30-ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!
தூத்துக்குடி மாவட்டம் விஜயபுரி துணை மின் நிலையத்தில் செப். 30 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மின் வாரியம் கடனில் இருந்து மீளும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் எப்போதும் போல வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சார சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் பழுதாகி இருக்கும் மின் வயர்கள் உரிய முறையில் சரி செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரம், மர கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.
கிள்ளி கொடுக்காம இப்படி அள்ளி கொடுக்குறாங்களே.. ஐ.டி ஊழியர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (செப்.30) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதாவது அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கெச்சிலாபுரம் மின் தொடர் மற்றும் மந்தித்தோப்பு மின் தொடர் ஆகியவற்றை 11 கி.வோ மின் தொடராக பிரிக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த காரணத்தால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று கெச்சிலாபுரம், கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்