தமிழகத்தில் மின்தேவையை சமாளிக்க புதிய திட்டம் – மின்வாரியம் நடவடிக்கை!!

0
தமிழகத்தில் மின்தேவையை சமாளிக்க புதிய திட்டம் - மின்வாரியம் நடவடிக்கை!!

தமிழகத்தில் கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் தேவை:

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே ஆகிய கோடை காலங்களில் மின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. மேலும், இந்த மின் தேவையை சமாளிப்பதற்காக மின்வாரியம் ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு கோடை காலத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாதம் முதல் மே மாதம் வரையிலும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரி உள்ளது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசின் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையிலும் தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் 1000 மெகாவாட் வீதம் மின் கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் மின் தேவை சமாளிக்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

அதிரடியாக 400 ஊழியர்களை பணி நீக்கிய பிரபல நிறுவனம் – ஷாக் அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!