TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மின் பற்றாக்குறை எதிரொலி!

0
TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு - மின் பற்றாக்குறை எதிரொலி!
TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு - மின் பற்றாக்குறை எதிரொலி!
TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மின் பற்றாக்குறை எதிரொலி!

நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அந்தந்த நிர்வாகத்தின் சார்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

மின் பற்றாக்குறை:

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை பிரச்னைகள் காரணமாக கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசிற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிலக்கரி பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று கடிதம் எழுதியிருந்தார். இதேபோல் ராஜஸ்தான், கர்நாடக மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மின் தட்டுப்பாடு சூழல் நிலவுகிறது.

அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத் தேவையை அனல் மின் நிலையங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வழங்கும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் மழை காரணமாக நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருந்த நேரத்தில் ஐடி துறை மட்டுமே நல்ல வளர்ச்சியை அடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஊழியர்களை தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருந்த காரணத்தால் மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் பணி நடந்து வருகிறது.

IPL 2021 : ஆட்ட நாயகன் முதல் ஆரஞ்சு கேப் வரை – விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனை காரணமாக நாட்டின் பல மாநிலங்களிலும் பல மணி நேரம் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐடி சேவை நிறுவனங்கள் எடுத்து வருகிறது. மேலும், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குப் பவர் பேக்அப் ரெடி செய்து கொள்ளும் படியும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான சேவை எந்த நேரத்திலும் தடைபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 14 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!