‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மறைந்த நடிகை சித்ராவிற்கு ரசிகர்கள் வழங்கிய பட்டம் – நெகிழ்ச்சி பதிவு!
சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், அவரது ரசிகர்கள் அவரை நினைவில் வைத்து புதிய செயல் ஒன்றை செய்துள்ளனர். ரசிகர்களின் இந்த செயல் பலரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
நடிகை சித்ரா:
சின்னத்திரை நடிகை சித்ரா பல வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் விஜய் டிவியில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தின் முல்லை கதாபாத்திரம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். முதலில் மக்கள் தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக தனது திறமை மூலம் மற்ற நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளை பெற்றுக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய சீரியல் – நடிகர் & நடிகையர் லிஸ்ட்!
தொடர்ந்து ஜீ தமிழ், ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு சேனல்களிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மெல்ல மெல்ல சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் மேலும் அதிக ரசிகர்களை பெற்றார். கலர்ஸ் தமிழ் சேனலில் கதாநாயகியாக வேலு நாச்சி என்ற தொடரில் சிலம்பம் சுற்றும் பெண்ணாக நடித்து வந்தார். இந்த தொடர் தனி அடையாளத்தை சித்ராவிற்கு பெற்றுத் தந்தது. இறுதியாக நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டினார்.
“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
இதனால் முல்லை கதாபாத்திரம் பெரிதும் மக்களை கவர்ந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவர் இறந்து விட்டதால் கதாபாத்திரத்தில் யாரையும் நினைத்து கூட பார்க்க மாட்டோம் என்று கூட சில ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், சித்ராவின் ரசிகர்கள் அவர்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சித்ராவிற்கு ‘மக்களின் நாயகி’ என்ற பட்டத்தை கொடுத்து அழகிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.