தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு – பாதுகாப்பு வழிமுறைகள்! சுகாதாரத்துறை வெளியீடு!

0
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு - பாதுகாப்பு வழிமுறைகள்! சுகாதாரத்துறை வெளியீடு!
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு - பாதுகாப்பு வழிமுறைகள்! சுகாதாரத்துறை வெளியீடு!

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு – பாதுகாப்பு வழிமுறைகள்! சுகாதாரத்துறை வெளியீடு!

தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை:

நாடு முழுவதும் வரும் நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் நினைவில் இருக்கும். அந்த பட்டாசுகள் சிவகாசி உள்ளிட்ட சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யும் போது மூலப்பொருட்கள் கூடுவதால் உற்பத்தி தொழிற்சாலையில் விபத்துகள் நிகழ்கின்றன. அதனை தடுக்கும் விதமாக பட்டாசு வெடித்தலில் சில நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் சில ஊழியர்களுக்கு வேலையும் இல்லாமல் போய்விட்டது.

அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!

ஒவ்வொரு தீபாவளிக்கும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் விபத்துகள் நிகழ்கின்றன. அவ்வாறு ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக மாநில பொது சுகாதாரத்துறை பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஏனெனில் இந்த தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக மட்டுமே. தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் பொதுவானது. அதனால் குழந்தைகள் பட்டாசு வெடித்தலில் கவனம் செலுத்த வேண்டும்.

பட்டாசு வெடித்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
  • திறந்த வெளியில் பட்டாசு வெடித்தால் எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீர் அல்லது மணலை ஒரு வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • எளிதில் தீப்பிடிக்கக்கூடிய நீண்ட நைலான் ஆடைகளை அணிவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக பொருத்தப்பட்ட பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு கை தூரத்தில் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்.
  • கைகளில் பிடித்தவாறு பட்டாசுகளை கொளுத்த வேண்டாம். பட்டாசு வெடித்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
  • பட்டாசுகளை மெழுகுவர்த்தி, தீபம் மற்றும் அடுப்பு போன்றவைகளுக்கு அருகில் கொளுத்தாதீர்கள். அதனை தொடர்ந்து மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை கொளுத்த வேண்டாம்.
  • பாதி எரிக்கப்பட்ட பட்டாசுகளை எறிந்து விடாதீர்கள். அதன் பின் எரிக்கப்பட்ட பட்டாசுகளை வாளியில் தண்ணீர் வைத்து அதில் போடவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!