அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!

0
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!

அரசுப் பணி தேர்வுகளில் பங்கு பெற பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இலவச பயிற்சி வகுப்பு:

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து பயிற்சி வகுப்புக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தேர்வு எழுத உள்ளவர்கள் மையங்களில் பயிற்சி பெறுவர். நாடெங்கும் பயிற்சி மையங்கள் அதிகமாக உள்ளது. இந்த பயிற்சி மையங்களில் சேர்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். சில போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? வலுக்கும் கோரிக்கை!

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற பயிற்சி வகுப்புகளின் மூலம் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டில் 71 நபர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு வார நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தேர்விற்கான பாடக்குறிப்பு இலவசமாக வழங்கப்படுவதோடு வார இறுதி நாட்களில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எஸ்எஸ்சி பேஸ் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விவரத்தை 04286 – 222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா ஷீலா கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!