இனி பட்டன் போன்லையும் மின் கட்டணம் செலுத்தலாம் – Internet தேவையில்லை.. வந்தாச்சு புதிய வசதி!
இந்தியாவில் தற்போது மின் பயனர்கள் ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே தங்களது மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த மற்றொரு புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மின் கட்டணம்:
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மக்கள் கடன் தொகை கட்டுவது, மொபைல் பில், மின் கட்டணம், ரீசார்ஜ் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்து வருகின்றனர். இதற்கு மத்தியில் இன்னும் சிலர் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு யுபிஐ-123 பே என்ற புதிய சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதன் மூலம் சாதாரண செல்போன்கள் வைத்திருப்பவர்களும் எளிதாக மின் கட்டணத்தை செலுத்தலாம். இண்டர்நெட் வசதி தேவையில்லை. சாதாரண போன் வைத்திருப்பவர்கள், முதலில் தங்களின் வங்கிக் கணக்கை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். பிறகு டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பிறகு மின் பயனர் ‘080 4516 3666’ அல்லது ‘6366 200 200’ என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
வீட்டு கடன் விகிதத்தை குறைத்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி – வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!
Exams Daily Mobile App Download
பின்னர் மின் கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்வு செய்து அதன் பிறகு பயனர்கள் மின்சார வாரியத்தின் பெயரை உள்ளிட்ட வேண்டும். உடனடியாக உங்களது மின் கட்டணத்தொகை காண்பிக்கப்படும். அப்போது நீங்கள் அந்த தொகையை பதிவிட்டு UPI பாஸ்வோடை உள்ளிட வேண்டும். பின்னர் பணம் உடனடியாக பரிவர்த்தனையாகி செய்யப்பட்டுவிடும்.