வீட்டு கடன் விகிதத்தை குறைத்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி – வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் வீட்டு கடனிற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான செயலாக்கக் கட்டணங்களை வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
வீட்டு கடன் வட்டி:
புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு உதவியாக பல பொதுத்துறை வங்கிகள் வீட்டு கடன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவு வட்டி விகிதத்தில் வீட்டு கடன் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) ஆண்டுக்கு 8.25% ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நடைமுறை நவம்பர் 14, 2022 முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையை பெற வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வசூலிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு விகிதமானது டிசம்பர் 31, 2022 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் இந்த சிறப்பு சலுகை குறித்து பாங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளர் எச் டி சோலங்கி கூறுகையில், பல வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், எங்களது வங்கியில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்து, சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு வீட்டுக் கடன்களில் வலுவான வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம். இந்த அறிவிப்பால் நகரங்கள் முழுவதும் நுகர்வோர் நம்பிக்கையுடன் வீட்டு விற்பனையை மேம்படுத்துவோம் என பாங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்