அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – மாதம் ரூ.500 செலுத்தினால் போதும்!
கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் ஒன்றை அரசு ஜூலை 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இத்திட்டத்தில் கிடைக்கும் பலன்களை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டம்
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்தில் ஓய்வூதியத்தொகை வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கேரள மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கான ஒரு மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இணைந்து கொண்டு பயன் பெற முடியும். இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டம் MEDSEP என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது இத்திட்டத்தில் இணைவதால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்ப்போம். அதன்படி, கேரள அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதந்தோறும் ரூ.500 பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். மேலும் இத்திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதால் ஜூன் மாத சம்பளத்தில் ரூ.500 பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அரசின் பொறுப்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், துணை சபாநாயகர், சபாநாயகர் உள்ளிட்டவர்கள் இணைந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் IT நிறுவன ஊழியர்கள் “WFO” முறைக்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லையா? ஆய்வில் தகவல்!
இத்திட்டத்தை ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் மூலமாக அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஊழியர்களிடமிருந்து ரூ.6000 தொகை பிடித்தம் செய்யப்படும். மேலும் இத்திட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவ செலவினத்திற்காக செலவு மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சை செலவு, மருத்துவர்களின் கட்டணம், அறை வாடகை, உணவு செலவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான செலவினத்தையும் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.