புதிய கண்ணம்மாவாக மாறும் ‘யாரடி நீ மோஹினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புது வரவு!
தமிழில் மெகா ஹிட் சீரியல் வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி விலகியுள்ள நிலையில், புதிய கண்ணம்மாவாக நடிக்க உள்ள நடிகையை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
புதிய கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடர் பிரைம் டைம் விஜய் டிவியின் பிரைம் டைம் டிஆர்பியை தக்க வைப்பதில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த தொடருக்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் தொடரில் நிகழ்ந்து வருகிறது. கண்ணம்மா தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற உண்மையை அறிந்து கொண்டு, அது ஹேமா தான் என்பதையும் அறிந்து கொண்டுள்ளார்.
அம்மாவாகும் “பாரதி கண்ணம்மா” வெண்பா, சீரியலில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!
இதனால் எப்படியாவது தனது குழந்தை தன்னிடம் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் சௌந்தர்யா மிகவும் கெஞ்சி கேட்டுள்ளதால் பாரதியிடம் ஹேமா இருக்கட்டும் என்று விடுகிறார். இந்நிலையில் குழந்தையின் பெயரை சொல்லி தன்னை டார்சர் செய்து வந்த வெண்பாவை நாசூக்காக சிறைக்கு அனுப்பி இருக்கிறார் கண்ணம்மா. இதனால் பாரதி கண்ணம்மா மேல் கோவம் கொண்டு கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோடீஸை அனுப்புகிறார். இதனால் கண்ணம்மா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். அதே சமயம் தனது அப்பாவை பற்றி கேட்கும் லட்சுமியிடம் கண்டிப்பாக அப்பாவிடம் சேர்த்து வைப்பதாக கூறுகிறார்.
‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் தாலி கட்டியதும் கண் கலங்கிய ஷபானா – வைரலாகும் வீடியோ!
கதை இப்படி விறுவிறுப்பாக செல்லும் நிலையில், கதையின் நாயகியாக நடித்து வரும் ரோஷினி தொடரில் இருந்து விலகியுள்ளதாக பல தகவல்கள் வெளிவந்துள்ளது. தொடருக்கான பல நாட்களின் காட்சிகளை ரோஷினி நடித்து கொடுத்துள்ளாராம். நல்ல வரவேற்பு உள்ள கண்ணம்மா கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துள்ள நக்ஷத்ரா தான் கண்ணம்மா வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் கண்ணம்மா கதாபாத்திரத்தை நக்ஷத்ரா எப்படி நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.