தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் – புதிதாக ரூ. 30,000 கோடி முதலீடுகள்!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் - புதிதாக ரூ. 30,000 கோடி முதலீடுகள்!
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் - புதிதாக ரூ. 30,000 கோடி முதலீடுகள்!
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் – புதிதாக ரூ. 30,000 கோடி முதலீடுகள்!

தமிழக அரசு சார்பில் ரூ. 30,000 கோடி மதிப்பிலான 6 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஒப்புதல்

தமிழக அரசின், 2023 – 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மேலும் ஏற்கனவே சொன்னது போல தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் ரூ. 30,000 கோடி மதிப்பிலான 6 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் மகிந்திரா ஆட்டோ மொபைல்ஸ், மிட்சுபிஷி போன்ற 6 முன்னணி நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!