ஜூன் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட கோடை விடுமுறை நாளையுடன் முடிவுக்கு வர இருப்பதால், புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1, 2022 முதல் திறக்கப்பட இருக்கின்றன. இப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக மாநில கல்வி அமைச்சர் வாசுதேவன் சிவன்குட்டி சில முக்கியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – 20 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்!
இப்போது மாநில கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ், ‘ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு வளாகங்களில் பராமரிப்பு பணிகளையும் முடிக்க வேண்டும். இது தவிர பள்ளி, வளாகம் மற்றும் குடிநீர் ஆதாரங்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் காவல்துறை அனுமதி சான்றிதழைப் பாதுகாக்க வேண்டும். கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
Exams Daily Mobile App Download
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில், அருகில் உள்ள சுகாதார மையத்துடன் ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி தயார்நிலையை மதிப்பிடுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.