தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி? பல்கலைகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதிய தளர்வாக M.Phil, PhD ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளுக்காக பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் வரும் ஜூலை 5, காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கை வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை தமிழக மாவட்டங்கள் 3 வகையாக பிரித்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!
அதன்படி புதிய தளர்வாக இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டு மாநிலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழக கல்லூரிகளுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி SRF/JRF, M.Phil, PhD ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள், பல்கலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள், மையங்களில் 50% பயிற்சியாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்கலை, பயிற்சி நிலையங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.