தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2021-22ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு ஜூலை 5 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தகுதி உள்ள மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பை பள்ளி தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு ஆபத்து இல்லை – நிதி ஆயோக் உறுதி!

இந்நிலையில் புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை ஜூலை 5 முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரடி விண்ணப்ப பதிவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை http://t.co.EjjzZfEuwx என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில், அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ, அந்த வகுப்பில் சேர்க்கைக்கான நடைமுறைகள் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் ஆகஸ்ட் 9 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் தவிர்த்து அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதையடுத்து தேர்வான குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!