அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் திருமணமான அவரது மகளுக்கும் வேலை – மாநில அரசின் திட்டம்!
உத்தரபிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இறந்தால் அவர்களது மகள்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
இந்தியாவில் அரசு வேலை வாங்க வேண்டும் என்பது அனைவரும் ஒரு பெரும் கனவாகவே இருந்து வருகிறது. படித்து முடித்தவுடன் எப்படியாவது அரசு வேலை வாங்க வேண்டும் என்று அனைவரும் முயற்சித்து வருகின்றனர். அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரசு வேலை என்பது எட்டாக் கனியாக உள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் அரசு துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
நவம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் – மாநில அரசு முடிவு!
தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகைகளும் வழங்கப்பட்டது.
பணி நேரம் முடிந்து ஊழியர்களை தொடர்பு கொள்ளும் அலுவலர்களுக்கு அபராதம் – அரசு அதிரடி!
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இறந்தால் அவர்களது மகள்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது வீட்டில் உள்ள மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு கருணை அடிப்படையில் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பணியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது திருமணமான மகளுக்கும் அரசு சார்பில் அரசு வேலை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுபமில்லாமல் எந்த பணியும் நடக்காமல் வேலை தெரியாமல் வேலையே செய்யத் தெரியாமல் இருக்கும் போது தற்போது எந்த பணியும் நடக்கவில்லை